உண்மையில் இந்த புத்தகத்தைப் பற்றி புத்தகக் கண்காட்சி நடந்த சமயத்தில் எழுதியிருக்க வேண்டும். ஆனால், இது காலதாமதமான பதிவு அல்ல என்பதால் பகிர்கிறேன்.
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் ஒரு நாயகன் அல்லது தலைப்பு இருக்கும். ஓபாமா, பிரபாகரன், அமெரிக்கா, ஈழம் போன்ற தலைப்பில் எல்லா பதிப்பகங்களும் புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வருவார்கள். இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியின் நாயகன் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான ’மோடி’ தான். பல பதிப்பகங்கள் மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் புத்தகங்கள் போட்டிருந்தனர்.
கிழக்கு பதிப்பகம் மட்டும் குஜராத், மோடி தலைப்புகளில் நான்கு புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார்கள். அதில் என்னை கவர்ந்த புத்தகம் மருதன் எழுதிய ”குஜராத் இந்துத்துவம் மோடி”
மோடியைப் பற்றி வந்த அனைத்து புத்தகங்களுமே மோடியை பற்றி கிடைத்த தகவல், விமர்சனம், செய்தி வைத்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், மருதன் இந்த புத்தகத்திற்கு குஜராத் வரை சென்று அங்கு பார்த்து, தெரிந்துக் கொண்ட உண்மையை எழுதியிருக்கிறார். மோடியை ஆதரிக்கும் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான Badri Seshadriவெளியிட்டுயிருப்பதும், மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் Haran Prasanna விற்பனை செய்வதும் கூடுதல் சிறப்பு.
மோடியின் வளர்ச்சியின் மாடல் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்பதும், அவருடைய ஆரம்பக்கட்ட வரலாறு ஹிட்லர், முசோலினிக்கு நிகராக இருப்பது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் தலித்துகளுக்கும் மோடி எதிரி போன்ற பல கருத்துக்களை ஆதரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்டோர்களின் எதிராக தொடரும் வன்முறையில் குஜராத் இரண்டாவது மாநிலமாக இருப்பதும், கையால் மலம் அள்ளும் கலாச்சாரம் குஜராத்தில் இருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார்.
குறிப்பாக, மோடியை பற்றி மருதையன் அவர்கள் கூறிய கருத்து மிகவும் முக்கியம்.
”மோடி இஸ்லாமியர்களின் எதிரி என்று சொல்வது தவறு. இஸ்லாமிய எதிரியாக இருப்பதைத் தான் மோடியும் விரும்புகிறார். அப்படியென்றால், அவர் இந்து , கிறிஸ்துவர்களுக்கு நண்பனா ?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.
ஹிட்லர் யூதர்களின் எதிரி என்பதால், அவர் ஜெர்மனியர்களுக்கு நண்பன் என்று அர்த்தமில்லை. அதேப் போல் தான் மோடியும்.
சமீபத்தில் குஜராத்துக்கு சென்ற மோடி ஆதரவாளரான பத்ரியும் ”மின்சாரம் ஒன்றை தவிர குஜராத் மாநிலம் தமிழ்நாட்டை விட பல விஷயங்களில் பின் தங்கியிருப்பதை” பதிவு செய்திருக்கிறார்.
மோடியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். இதில், இருக்கும் தகவல்கள் களத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள். இதை மறுக்க நினைக்கும் மோடி ஆதரவாளர்கள் தனி புத்தகம் போடுவதற்குள் தேர்தல் நெருங்கிவிடும்.
Marudhan Gangadharan களப்பணிக்கும், முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் !!!
நன்றி : குகன் ( https://www.facebook.com/photo.php?fbid=815915201757895&set=a.284708604878560.88791.100000182679724 )
இணையத்தில் வாங்க...
http://www.wecanshopping.com/products/குஜராத்-இந்துத்துவம்-மோடி.html
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் ஒரு நாயகன் அல்லது தலைப்பு இருக்கும். ஓபாமா, பிரபாகரன், அமெரிக்கா, ஈழம் போன்ற தலைப்பில் எல்லா பதிப்பகங்களும் புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வருவார்கள். இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியின் நாயகன் பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான ’மோடி’ தான். பல பதிப்பகங்கள் மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் புத்தகங்கள் போட்டிருந்தனர்.
கிழக்கு பதிப்பகம் மட்டும் குஜராத், மோடி தலைப்புகளில் நான்கு புத்தகங்கள் கொண்டு வந்திருந்தார்கள். அதில் என்னை கவர்ந்த புத்தகம் மருதன் எழுதிய ”குஜராத் இந்துத்துவம் மோடி”
மோடியைப் பற்றி வந்த அனைத்து புத்தகங்களுமே மோடியை பற்றி கிடைத்த தகவல், விமர்சனம், செய்தி வைத்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், மருதன் இந்த புத்தகத்திற்கு குஜராத் வரை சென்று அங்கு பார்த்து, தெரிந்துக் கொண்ட உண்மையை எழுதியிருக்கிறார். மோடியை ஆதரிக்கும் கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான Badri Seshadriவெளியிட்டுயிருப்பதும், மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் Haran Prasanna விற்பனை செய்வதும் கூடுதல் சிறப்பு.
மோடியின் வளர்ச்சியின் மாடல் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்பதும், அவருடைய ஆரம்பக்கட்ட வரலாறு ஹிட்லர், முசோலினிக்கு நிகராக இருப்பது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் தலித்துகளுக்கும் மோடி எதிரி போன்ற பல கருத்துக்களை ஆதரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்டோர்களின் எதிராக தொடரும் வன்முறையில் குஜராத் இரண்டாவது மாநிலமாக இருப்பதும், கையால் மலம் அள்ளும் கலாச்சாரம் குஜராத்தில் இருப்பதையும் மேற்கோள் காட்டுகிறார்.
குறிப்பாக, மோடியை பற்றி மருதையன் அவர்கள் கூறிய கருத்து மிகவும் முக்கியம்.
”மோடி இஸ்லாமியர்களின் எதிரி என்று சொல்வது தவறு. இஸ்லாமிய எதிரியாக இருப்பதைத் தான் மோடியும் விரும்புகிறார். அப்படியென்றால், அவர் இந்து , கிறிஸ்துவர்களுக்கு நண்பனா ?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.
ஹிட்லர் யூதர்களின் எதிரி என்பதால், அவர் ஜெர்மனியர்களுக்கு நண்பன் என்று அர்த்தமில்லை. அதேப் போல் தான் மோடியும்.
சமீபத்தில் குஜராத்துக்கு சென்ற மோடி ஆதரவாளரான பத்ரியும் ”மின்சாரம் ஒன்றை தவிர குஜராத் மாநிலம் தமிழ்நாட்டை விட பல விஷயங்களில் பின் தங்கியிருப்பதை” பதிவு செய்திருக்கிறார்.
மோடியின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். இதில், இருக்கும் தகவல்கள் களத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள். இதை மறுக்க நினைக்கும் மோடி ஆதரவாளர்கள் தனி புத்தகம் போடுவதற்குள் தேர்தல் நெருங்கிவிடும்.
Marudhan Gangadharan களப்பணிக்கும், முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் !!!
நன்றி : குகன் ( https://www.facebook.com/photo.php?fbid=815915201757895&set=a.284708604878560.88791.100000182679724 )
இணையத்தில் வாங்க...
http://www.wecanshopping.com/products/குஜராத்-இந்துத்துவம்-மோடி.html

No comments:
Post a Comment